Tamil Political News

10/Breaking News/ticker-posts

நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா | Eelam Songs Lyrics

 நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா

நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா

அடர்ந் காட்டில் எரியும் தியாக நெருப்புத்தானடா 

உனை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும் தானடா 


எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய்

தமிழீழ மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய்

கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் 

நம் களத்து வீரர் போகும் போது தலையுமாட்டினாய் தலையுமாட்டினாய்


தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய்

உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூடினாய்

நம்பி நின்ற எங்களிற்கு நஞ்சை ஊட்டினாய் 

புலிக் காளை வரும் அந்த நேரம் கம்பி நீட்டுவாய் கம்பி நீட்டுவாய்


வீதி எங்கும் சாவினோடு மக்கள் ஓடுறார்

புலி வீரர் நின்று எதிரியோடு யுத்தமாடுறார்

நீதியற்ற பகைவனோடு கூட்டம் போடுறாய் 

அவன் நீட்டுகின்ற பதவியேற்று ஆட்டமாடுறாய் ஆட்டமாடுறாய்


பெற்றதாயை விற்றுக் காசு பிழைக்கும் பேர்வழி

நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி

அற்புதங்கள் நாளை தமிழீழம் காணுவார் 

எம் அண்ணன் வந்து உங்களிற்குத் தீர்ப்புக் கூறுவார் தீர்ப்புக் கூறுவார்